Wednesday, 6 April 2016

வல்லளார்

மெய்ப்பொருள் பாடல்கள்

எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா?
நிச்சயமாக இல்லை…. நீங்கள் எந்த கொள்கை வைத்து இருக்கிறீர்களோ அந்த கொள்கைக்கு என்ன கிடைக்குமோ!! அதுதான் கிடைக்குமே தவிர நாம் இறைவனை அடைய முடியாது .
இறைவன் ஏக இறைவனாக இருந்தால் அவனை அடையும் வழியும் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர நிச்சயமாக வேவேராக இருக்க முடியாது….
அதற்குதான் …. நாம் பார்க்க வேண்டியது … ஞானிகளின் பாடல்களையும் அவர்களின் கருத்துக்களையும் தானே தவிர…. சமயத்தையோ, ஆசிரம்த்தையோ அல்ல…. அப்படி சமயத்தின் படியோ (or) ஆசிரமத்தின் படியோ நடந்தால் நீங்கள் மிஞ்சி போனால் சமய தலைவனாகவோ அல்லது ஆசிரம தலைவனாகவோ ஆக முடியமே தவிர ஒரு காலும் பிரபஞ்சத்தின் அதி உன்னதமான நிலையை அடைய முடியாது……….
இதை திருஅருட்பிரகாச வள்ளலார் நன்கு உணர்ந்ததால் தான் இப்படி சொன்னார்…………
“இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தைன் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல்வேண்டும்”
இப்பொழுது நாங்கள் கொடுக்க போகும் மெய் பொருள் விளக்க பாடல்களை நாம் ஒரு சமயத்திலோ அல்லது ஆசிரம்திலோ 50 வருடம் குப்பை கூட்டினால் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே……………. அந்த அளவிற்கு இது ரகசியமாக வைக்க படுகிறது … அதை பட்ட வர்த்தனமாக இங்கு நாங்கள் வெளிபடுத்துகிறோம்.
வள்ளல் பெருமானின் திருவடி வணங்கி இதை பதிகிறேன்….. உண்மையான ஆன்ம தாகம் உள்ளவர்களை இந்த பதிவு போய் சேர அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வேண்டி கொள்கிறேன்.
பட்டினத்தார் பாடல்:
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்
கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து
கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே
முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.”
வெட்டாத சக்கரம் – நமது கண்மணி எப்படி உள்ளது.. அதாவது கருவிழி.. வட்டமாக சக்கரமாக உள்ளதா… அது வெட்டி வட்டமாக்கபட்ட சக்கரம் அல்ல என்கிறார்.
பேசாத மந்திரம் – பேசினால்தானே மந்திரம், பேசாவிட்டால் மௌனம். கண் பேசாது அதான் மௌனம்.
வேறொருவர்க் கெட்டாத புட்ப – வேறொருவருக்கு எட்டாத புட்பம் நம் கண்மலர் எப்படி எனில்… யாரவது உங்கள் கண் அருகில் கையை கொண்டு வந்தால் இமைகள் மூடி கொள்ளும் இதனைத்தான் வேறொருவருக்கு எட்டாத புட்பம் என்று பாடினார்……
மிறையாத தீர்த்த – நம் கண்ணிலே உள்ள நீர் இறைக்கபடாமல் உள்ளதா….ஆம் இறைவனை நினைக்க நினைக்க நீர் கங்கை போல் பெருகி ஒடுமஅல்லவோ…
இந்த இடத்தில் நீங்கள் எமது நாயகன் வள்ளல் பெருமானின் பாடலை நினைவு படுத்தி கொள்ளவும்……
“நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே
என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்ததும்
நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்
கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன்
சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே”
புரிகறதா எல்லாம் கண்தான் என்று………….
யன்றோ குருநாதன் மொழிந்ததுவே – இவைகளையே என் குருநாதன் மொழிந்தது என்று கூறுகிறார்……
இனிமேலாவது நாம் யாரை குரு என்று கொள்ள வேண்டும் என்று புரிகறதா….. இதை சொல்லி உணர்த்தி காடுபவர்தான் குரு…. அதை விட்டு விட்டு எல்லா அசிரமங்களிலயும் சொல்லி கொடுக்கப்படும் மூச்சு பயறிசி, காலை நீட்டி மடக்கி செயும் யோகா போன்றவற்றை சொல்லி தருபவர்களி எல்லாம் ஞான சர் குரு என்று நாம் கொள்ள கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பட்டினத்தடிகளின் மிக அழகான பாடல்……….

“கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.”
“கண்டம் கரியதாம்” – கண்டம் கருப்பு நிறமுடையது – கருவிழி.
“கண் மூன்று உடையதாம்” – அது எப்படி???
ஆம் ஐயா… கண்ணில் முதலில்
1. வெள்ளை படலம் உள்ளதா???
2. அதனுள் ஒரு கருபடல்ம் உள்ளதா??
3. அதனுள் இறுதியாக ஒரு சிறிய கரு விழி உள்ளதா??
இதுதான் மூன்று கண் என்பது!!!!
“கடலருகே நிற்கும் கரும்பு” என்று பாடுகிறார்….
கரும்பு எங்காவது கடலில் விளையுமா…தோழர்களே….. சிந்தியுங்கள் …. அப்புறம் எப்படி “…….கரும்பு” என்று பாடினார்.
கடல் நீர் எப்படி இருக்கும்??
கரிக்குமா???? உங்கள் கண்ணீர் எப்படி இருக்கும்?????? சொல்லுங்கள் அதுவும் கரிக்குமா!!!!!
அந்த கடல் போன்ற இடத்தில் நிற்கும் கரும்பாம்????
இதை நாம் கரும்பு என்று படிக்க கூடாது?? கருப்பு + பூ ???
ஆம் இருக்கிறது அது நம் கண் மலர்தான் அதுதான் நம் கண்ணீர் என்ற கடலில் ஒற்றி நிற்கும் கரும்பு என்று பாடினார்.
திருமூலர் பாடல்:
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே –  113
இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நம் வினைக்கு ஏற்ப உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை தலைக்கு முன் பக்கத்திலே காட்டி – உள் நின்று உருக்கி ஒப்பிலாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி – களிம்பாகிய
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வௌகைண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே – 600
நயனம் என்றால் கண் ஐயா….கண்களில் உள்ள ஒளியை பார்த்து சாதனை செய்ய செய்ய.. விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன் காரியபடுவதை காணலாம் … என்கிறார்
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே – 1871
எல்லாமே கண்தான். இதை தவிர ஒன்றும் இல்லை என்கிறார்
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே – Song_2823
காணவல்லவர்கள் ஆர்வத்தோடு முயல்பவர்கள் கண்மணியாம் இறைவனை காணுங்கள் என்கிறார்
இறுதியாக…. இந்த பாடலை பாருங்கள்…
….
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே – Song_603
எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் செய்தாலும் அறிய முடியாது. கண்ணில் கலந்து நின்ற அவனை நாடி உள்ளே ஒளிபெற நோக்க காணலாம் அவனை என கூறுகிறார்.
மும்மலங்களை அறுத்தான் என்கிறார்
இதற்க்கு மேலும் சில திரு மூலரின் ஞானத்தை தெளிக்க முடியும் ஆனால் இப்போதைக்கு இது போது என்று நினைக்கிறேன்.
மாணிக்கவாசகர் பாடல்:
பாடலை பார்ப்பதற்கு முன் மாணிக்கவாசகரை பற்றி எம் வள்ளல் பெருமானின் பாடலை பாருங்கள்……….
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
இது போதாதா…….அவர் புகழ் சொல்ல…. எங்காவது கேள்வி பட்டதுண்டா…. ஒரு சுத்த மெய் ஞானி…. இன்னொரு சுத்த மெய் ஞானியை பற்றி பாடியதுண்டா?????
வன்திருபெருந்துறையாம் வழியடியோம் கண்ணகத்தே
நின்று களிதரும் தேனே- திருபள்ளிஎழுச்சி பாடல்-9
திருபெருந்துறையாம் – திருவாகிய இறைவன் தங்கியிருக்கும் பெரும் துறை .
பெரிய துறை – இடம் என்று பொருள்படும்
இது நம் உடலில் அடியார்களாகிய எங்கள் கண்ணில் அகத்தே – உள்ளே நின்று ஆனந்தம் தருபவனே என இறைவன் நம் கண்ணினுளே நின்றதை தெளிவு படுதியுருகிறார்
“அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே”
ஒப்பில்லாத நம் கண் – மணியே அம்மையப்பன் என்று சொல்கிறார்
மாணிக்கவாசகரும் ஒளியுடல் பெற்றவர்தான்.
தாயுமானவர் பாடல்:

“காணும் கண்ணில் கலந்த கண்ணே”
நாம் காணுகின்ற நம் உடலில் உள்ள கண்ணில் கலந்த இறைவனே என்கிறார்…………….
“கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நாணுகின்றவர் நான்தொழும் தெய்வமே”
கண்ணுள் நின்ற ஒளியை – கருவிழிக்குள் விண்ணாகிய ஆகாயத்தில் அந்தரத்தில் நின்று விளங்கும் மெய்யான – ஒளியை கருத்திலே இருத்தி இரவு பகல் பாராது எந்நேரமும் எண்ணி எண்ணி சாதனை புரிபவர்களே நான் தொழும் தெய்வம் என்று தாயுமான சுவாமிகள் கூறுகிறார்.

http://tamil.vallalyaar.com/?p=2582

Saturday, 2 April 2016

தமிழ் தமிழ்

தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது"
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3).
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
"தமிழ் வருடங்கள்"
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

அயணங்கள்"
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
"ருதுக்கள்"
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
"மாதங்கள்"
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

"பக்ஷங்கள்"
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
"திதிக்கள்"
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
"வாஸரங்கள்"
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
"நட்சத்திரங்கள்"
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

"கிரகங்கள்"
கிரகங்கள் ஒன்பது ஆகும்.
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .
நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.
சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி
**************************************
பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.
செவ்வாய் :
************
சுப்ரமண்யர்
ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.
புதன் :
********
விஷ்ணு
ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.
குரு :
******
பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)
ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.
சுக்ரன் :
********
லக்ஷ்மி, இந்திரன்
ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.
சனி :
******
எமன், சாஸ்தா
உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).
ராகு:
******
காளி, துர்கை
கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.
கேது :
*******
விநாயகர், சண்டிகேஸ்வரர்
ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).
 
உடலுக்கு ஒன்பது வாசல்!
****************************
மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன
1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்
இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்"
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
"பூதங்கள்"
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
"மஹா பாதகங்கள்"
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
"பேறுகள்"
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
"புராணங்கள்"
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகள
ை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
"இதிகாசங்கள்"
இதிகாசங்கள் முன்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது